நெஸ்லே லங்கா நிறுவனத்தின் பால் மற்றும் தெங்குசார் உற்பத்தி கொள்ளவை அதிகரிப்பதற்காக பன்னல
பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய தொழிற்சாலைக்கான அடிக்கல் நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நாட்டப்பட்டது.
நெஸ்லே லங்கா நிறுவனத்தின் வர்த்தக மட்டத்திலான மிகச் சிறந்த பாற்பண்ணையாளர்களை பாராட்டும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கான பரிசில் மற்றும் சான்றிதழ்களும் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.
தெங்கு பயிர்ச்செய்கை சபை, நெஸ்லே லங்கா நிறுவனத்துடன் இணைந்து தென்னை பயிர்ச்செய்கையை அதிகரிக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்திருந்த தென்னம்பிள்ளைகள் வழங்கும் திட்டத்தின் குறியீடாக ஜனாதிபதி சில பண்ணையாளர்களுக்கு தென்னம்பிள்ளைகளையும் வழங்கினார்.
அமைச்சர்களான ரவி கருணாநாயக்கஇ காமினி ஜயவிக்கிரம பெரேராஇ பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேராஇ நெஸ்லே லங்கா கம்பனியின் முகாமைத்தவ பணிப்பாளர் , கூட்டு செயற்பாட்டு உபதலைவர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.