பல வருடங்களாக ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடை ஜிஎஸ்பி வரிச்சலுகை நீக்கப்பட்டுள்ளது.
நேற்று (11) தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இச்சலுகை மீண்டும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
இதன்மூலம் இலங்கையின் உற்பத்தி பொருட்களை ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கு இலகுவில் ஏற்றுமதி செய்து கொள்ள முடியும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையாளர் கூறியுள்ளார்.
அதன்படி இலங்கையின் ஆடை வகைகள், மீன்கள் உள்ளிட்ட பல பொருட்களை ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதிய செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.