நக்கில்ஸ் மலைத்தொடர் பள்ளத்தாக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மொகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு மங்கள நீர் நிரப்பல்
நிகழ்வு இன்று (11) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறுகிறது.
1150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்நீர்த்தேக்கத் திட்டத்தினூடாக 940000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் உற்பத்திகள் மேற்கொள்ள முடியும் என்று மகாவெலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடற்றுறை பிரதியமைச்சர் அநுராத ஜயரத்ன நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மொரகஹகந்தவில் இருந்து நிர்மாணிக்கப்பட்டுள்ள எலஹர வாய்க்கால் திட்டத்தையும் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.