மேன்முறையீட்டுக் குழுவின் எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 17ஆம் திகதி கையளிக்குமாறு உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அறிவித்துள்ளார்.
கடந்த திங்கட் கிழமை (09) பாராளுமன்றில் நடைபெற்ற கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடலின் போது விகிதாசார முறையில் தேர்தலை நடத்த எந்தவொரு கட்சியும் விரும்பவில்லை.
குறித்த அறிக்கையில் ஐந்து உறுப்பினர்களில் மூவர் மட்டுமே கையெழுத்திட்டுள்ளனர். இந்நிலையில் அறிக்கையை பெற்றுக்கொண்டால் அது சட்டத்தை மீறிய செயலாகும். எனவே ஐவரும் கையெழுத்திட்டு எதிர்வரும் 17ஆம் திகதி என்னிடம் வழங்குமாறு அறிவித்துள்ளேன் என்று அமைச்சர் தெரிவித்தார்.
குறித்த அறிக்கை கடந்த வருடம் இறுதியில் கையெழுத்தில்லாத காரணத்தினால் அமைச்சர் நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.