அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் மருந்து உற்பத்தியை அபிவிருத்தி செய்வதற்கான அடிப்படை மற்றும் நவீன வசதிகள் கொண்ட உற்பத்தி நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் நாளை (11) கைசாத்திடப்பவுள்ளது.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு பிரதிநித்து நிறுவனத்துடன் மேற்கொள்ளப்படவுள்ள இவ்வொப்பந்தமானது நாளை மாலை 2.00 மணிக்கு சுகாதார அமைச்சில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் கையெழுத்திடப்படவுள்ளது.
இப்புதிய உற்பத்தி நிலையமானது 1.5 பில்லியன் ரூபா நிதிச் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
அரசாங்கமானது வருடாந்தம் 55 பில்லியன் ரூபா நிதியை மருந்து கொள்வனவுக்காக செலவிடுகிறது. இலங்கையில் 32 வகையான மருந்து வகைகள் தயாரிக்கப்படுகின்றன. தரமான மருந்துகளை நாடு முழுவதிலுமுள்ள மருத்துவமனைகளுக்கு விநியோகிப்பதற்காவும் மருந்துற்பத்தியை மேம்படுத்துவதற்கும் சுகாதார அமைச்சர் மேற்கொண்ட தீர்மானத்திற்கமைய இப்புதிய உற்பத்தி நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
2018ஆம் ஆண்டில் இலங்கைக்கு தேவையான மருந்துகளில் 75 வீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது தனது நோக்கம் என்று சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கமைய 32 ஔடத நிறுவனங்கள் சுகாதார அமைச்சுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளன என்று அவர் மேலும் ரெவித்தார்.