ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி ஏற்று 2 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 258 கைதிகள் நேற்று (08) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறு குற்றங்கள் புரிந்தவர்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த முடியாத நிலையில் இருந்த 258 பேர் இவ்வாறு நாடாளாவிய ரீதியில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய யாழ். சிறைச்சாலையில் விளக்கமறியலில் இருந்த இரு கைதிகள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
சிறுகுற்றம் புரிந்த நிலையில் தண்டப்பணம் செலுத்தாதிருந்த இருவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.