ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகர் அமரர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க அவர்களது 118 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஞாபகார்த்த நிகழ்வு இன்று (08) முற்பகல் காலி முகத்திடலிலுள்ள
பண்டாரநாயக்க உருவச்சிலைக்கு அருகில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார் உட்பட்டோர் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்.
அமைச்சர்களான மகிந்த அமரவீர, சுசில் பிரேம ஜயந்த, துமிந்த திஸாநாயக்க ஆகியோர் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
வடமத்திய மாகாண பிரதம அதிகரண சங்கநாயக்கர், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் துறவிகள் அமைப்பின் தலைவர் போமிரியே கனேவத்த புராண ரஜமகா விகாரையின் விகாராதிபதி வணக்கத்துக்குரிய கல்தொல பியநந்த நாயக்க தேரர் நிகழ்வின் முதன்மை ஆசீர்வாத உரையை நிகழ்த்தினார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
அத்துடன், அமரர் பண்டாரநாயக்க அவர்களது 118 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டும் சுபீட்சமிக்க தேசத்தை உருவாக்குவதற்காக அமுல்படுத்தப்படும் ‘பேண்தகு யுகம் – மூன்றாண்டு உதயம்’ தேசிய செயற்திட்டத்தை முன்னிட்டு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட தானம் வழங்கும் நிகழ்வு இன்று மதியம் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது.