தேசிய மரநடுகை திட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் ஆயிரம் மரக்கன்றுகளை நடும் நடவடிக்கையில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளமையை முன்னிட்ட இம்மரநடுகை இடம்பெறுகிறது.
இதற்கமைய இவ்வாரத்தின் ஆரம்பப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது பல்வேறு வகையான தாவர வகையைச் சேர்ந்த 13,200 தாவரங்கள் நடப்பட்டன.
கிழக்கு பாதுகாப்பு படைத்தலைமையகத்தைச் சேர்ந்த படை வீரர்களினால் 5600 மரக்கன்றுகளும், வன்னி பாதுகாப்பு படைத்தலைமையகத்தைச் சேர்ந்த படை வீரர்களினால் 2800 வல்லை மரக்கன்றுகளும் , கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகத்தினால் மா, எஹெல, வேம்பு, தேக்கு மற்றும் பனை உள்ளிட்ட 2100 மரக்கன்றுகளும் நடப்பட்டன.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகத்தைச் சேர்ந்த படை வீரர்களும் இத்திட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை தமது வளாகத்தினுள் நட்டனர். மத்திய பாதுகாப்பு படைத்தலைமையகத்தைச் சேர்ந்த படை வீரர்கள் 2400 மரக்கன்றுகளை நட்டதுடன் மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தினால் இருநூறு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.