ரண்மினிதன்ன விற்பனை செய்வதற்கு எந்தவொரு தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரித்தார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் நேற்று (04) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசியல்ரீதியில் தோல்வியடைந்த ஒரு தொகுதியினரே இத்தகைய பொய்யான வதந்திகளை பரப்புகின்றனர். கொழும்பில் இருந்து ரண்மினிதன்னவுக்கான தூரம் அதிகமாக உள்ளமையினால் அவ்விடத்தை கலை தேவைகளுக்கு பயன்படுத்துவது மிகவும் குறைவாக உள்ளது. எது எவ்வாறு இருப்பினும் அவ்விடத்தை கலைஞர்களுக்கு பயன்படுத்துவதற்கேற்றாற்போல் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.