கட்டுநாயக்க விமான நிலைய ஓடுதளங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகளினால் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
விமானநிலையத்தினுல் செல்லும் வாகனங்களுக்கும் பயணிகளுக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இவ்விசேட போக்குவரத்துத் திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டமானது, பிற்பகல் 3.00 மணி தொடக்கம் காலை 9.00 மணிவரை நடைமுறையில் இருக்கும்.
அதற்கமைய, அதிவேக வீதியில் கொழும்பு மற்றும் சிலாபத்திலிருந்து வரும் வாகனங்கள் விமான நிலைய பிரதான நுழைவாயினுள் நுழைந்து பழைய பி.வீ.ஜி வாயில் வழியாக புறப்படுதல் மற்றும் உள் நுழைதல் வாயிலுக்கு செல்ல முடியும்.
அதிவேக வீதி வழியாக மினுவாங்கொடை குருணாகல் நோக்கி பயணிக்கும் வாகனங்கள் குறித்த சந்தியிலிருந்து எவரியவத்தை நகரின் திசையில் திரும்பி பூமர் சந்தி கோவின்ன வீதி அடியம்பலம் ஆலய சந்தியில் மினுவங்கொடை நோக்கி அல்லது ஹினட்டியன யாகெடமுல்ல வீதி ஊடாக மினுவங்கொட நோக்கி பயணிக்க முடியும். இவ்வானங்களுக்கு கட்டுநாயக்க நைகந்த வீதி வழியாக பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
விமான நிலையத்திலிருந்து அதிவேக வீதி நோக்கி செல்லும் வாகனங்கள் விமான நிலைய உள்நுழையும் பிரதான வாயில் வழியாக திரும்பிச் செல்ல முடியும்.
விமானநிலையத்திலிருந்து மினுவாங்கொட நோக்கி புறப்படும் வாகனங்கள் விமான நிலையத்தின் வெளியேறும் வாயில் வழியாக வெளியேறி நைகந்த ஊடாக மினுவாங்கொட நோக்கி பயணிக்க முடியும்.
மினுவாங்கொட, கம்பஹா மற்றும் குருணாகலிலிருந்து விமான நிலையத்திற்கு மாத்திரம் வரும் வானங்கள் ஆடியம்பலம நைகந்த வீதி வழியே விமானநிலையம் வந்து வாயிலினூடாக உள்நுழைதல் மற்றும் வெளிச்செல்லாம்.
மினுவங்கொட, கம்பஹா குருணுாகல் ஆகிய பிரதேசங்களில் இருந்து கட்டுநாயக்க அதிவேக வீதியில் விமாநிலையத்திற்கு செல்லாத வாகனங்கள் கொழும்பு குருணாகல் யாகொடமுல்ல சந்தியிலும் பீல்லவத்த குருச சந்தியில் திரும்பி மாதுவ பூமர சந்தி வீதி வழியாகவும் ஆடியம்பலம சந்தியில் திரும்பி கோவின்ன பூமர சந்தி வீதி வழியாகவும் எவரிவத்த நகரின் ஊடாக சீதுவ அதிவேக வீதியை நோக்கியும் பயணிக்க முடியும்.
இத்திட்டத்தில் ஆடியம்பலத்திலிந்து நைகந்த வழியாக கட்டுநாயக்க நோக்கி பயணிக்கும் பாதையின் விமான நிலையம் நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும். எனினும் விமான நிலையித்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுமாயின் ஆடியம்பலத்திலிருந்து சந்தி வரையான மினுவங்கொட கட்டுநாயக்க பாதை முழுமையாக மூடப்பட்டு மினுவங்கொடவிலிருந்து கொழும்பு அதிவேக வீதி நோக்கி மற்றும் விமான நிலையம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் கோவின்ன பூமர சந்தி வழியாக எவரியவத்த நகரிற்கு சென்று சீதுவ வழியாக கொழும்பு செல்ல முடியும்