இம்முறை வரவு செலவில் முன்மொழியப்பட்டுள்ளபடி பாடசாலை மாணவர்களுக்கு இலவச மருத்துவ காப்புறுதி சான்றிதழ்கள் விரைவில் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார.
இம்மருத்துவ காப்புறுதி திட்டத்திற்கமைய 5- 19 வயது வரையான ஒவ்வொரு பாடசாலை மாணவ மாணவிகளுக்கும் மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு ஒரு இலட்சம் ரூபாவும் வௌிநோயாளர் பிரிவுக்கு ஒரு இலட்சம் ரூபாவும் என மருத்துவ காப்புறுதி வழங்கப்படவுள்ளது.
அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கும் இம்மருத்துவ காப்புறுதி வழங்கப்படவுள்ளது. இக்காப்புறுதிக்கென 2,700 மில்லியன் ரூபா நிதியயொதுக்கப்பட்டுள்ளதுடன் கல்வியமைச்சினூடாக இத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.
இதுதவிர பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடபுத்தகங்கள், இலவச சீருடைகள், வறிய மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டம், ஒரு கோப்மை பால் மற்றும் இலவச பாதணிகள் வழங்கல் என பல்வேறு நலன்புரி நடவடிக்கைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
நாட்டில் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் காணப்படும் அடிப்படை வசதி குறைப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய 7000 மில்லியன் ரூபா நிதியொதுக்கிடப்பட்டுள்ளது. இந்நிதியினூடாக நாட்டில் உள்ள 1500 பாடசாலைகளில் மின்சாரம், மலசலகூட வசதிகள், குடி நீர் வசதி என்பன ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.