அரசியல் அதிகாரசபையின் ஊடாக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களினூடாக பொது மக்களுக்கான கடமைகளை நிறைவேற்றும் தனித்துவம் மிக்க பொறுப்பு அரச அதிகாரிகளுக்குள்ளது என்று ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன் தெரிவித்துள்ளார்.
புதுவருடத்தின் கடமைகளை ஆரம்பிக்கும் இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (02) நடைபெற்ற ஜனாதிபதி அலுவலக ஊழியர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் புரட்சிகரமான யுக மாற்றதின் பின்னர் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த இரண்டு வருட காலத்தில் பல்வேறு திட்டங்களினூடாக நாட்டின் அபிவிருத்தியை மேற்கொள்ள எடுத்த முயற்சிக்கு பல்வேறு வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அரச அதிகாரிகளுக்கும் இதன் போது செயலாளர் நன்றிகளை கூறினார்.
நாட்டின் அரச தலைவருடன் நெருங்கி பணியாற்றும் ஊழியர்களாகி ஜனாதிபதி அலுவலக ஊழியர்கள் தமது கடமைகளை நிறைவேற்றும் போது ஜனாதிபதியனதும் நாட்டினதும் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் கடமையாற்ற வேண்டும். ஒருவரினால் தற்செயலாக ஏற்படும் பிழைகள் முழு அரச பொறிமுறைக்கும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் இதன் போது செயலாளர் சுட்டிக்காட்டினார்.
பிறந்துள்ள புத்தாண்டில் தமது கடமை பொறுப்புக்களை முழுமையாக நிறைவேற்வோம் என்று இந்நிகழ்வின் போது ஜனாதிபதி செயலக ஊழியர்கள் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டனர்.
வேகமான அபிவிருத்தினூடாக வறுமை ஒழிந்து இலங்கை வாழ் மக்களுக்கு பாதுகாப்பும் சுபீட்சமும் நிறைந்த எதிர்காலத்தை உருவாக்கி, கனவுகள் நனவாகும் ஆண்டாக பிறந்துள்ள 2017ஆம் ஆண்டு அமைய இச்சந்திப்பின் போது செயலாளர் வாழ்த்துக்கூறினார்.
இச்சந்திப்பில் ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து ஊழியர்களும் கலந்துகொண்டனர்.