எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பாராளுமன்றில் ஏனைய கட்சிகளின் தலைவர்களும் ஆணைக்குழுவுடன் கலந்துரையாட வேண்டியிருப்பதனால் குறித்த அறிக்கையை பிரதமரிடம் கையளிப்பதற்கான தினத்தை வழங்குமாறு துறைசார் அமைச்சர் கோரியுள்ளார்.
மேலும் ஏனைய கட்சிகளின் தலைவர்களும் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அடுத்த வாரம் பாராளுமன்றில் தினமொன்றை ஒதுக்கித் தருமாறு அமைச்சர் பிரதமரிடம் கோரியுள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.