மட்டக்களப்பு மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டில் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்ட 11,968 அபிவிருத்தித் திட்டங்களுக்காக 5 207.91 மில்லியன் செலவிட்டப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
2016ஆம் ஆண்டுக்கான இறுதி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் இன்று (26) காலை 9.30 முதல் 12 மணிவரையில் (26) நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்
இதன்போது, இந்த வருடத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம், அடுத்த வருடத்துக்கான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன. இம்மாவட்டத்தின் அபிவிருத்திக்காகப் பல்வேறு மட்டங்களிலிருந்தும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மூலம் 11,968 திட்டங்கள் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டதாகவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இன்றைய மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான இ.நித்தியானந்தன், ஆர்.துரைரெட்ணடம், கோ.கருணாகரம், ஜீ;கிருஸ்ணப்பிள்ளை, எம்.நடராஜா, சிப்லி பாரூக் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
மாவட்டச் செயலாளர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின வரவேற்புரையை அடுத்து மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களான இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தின் போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித்திட்டங்கள் குறித்தும் எதிர்வரும் வருடங்களில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டதுடன், மக்களின் தேவைகள் சார் பிரச்சினைகள், மற்றுமு; நடவடிக்கைகள் குறித்தும் காலந்துரையாடப்பட்டன.
LDA_dmu_batti