பண்டிகைக்காலத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் இன்றும் (24) நாளையும் (25) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பாணந்துறைக்கும் நீர்கொழும்பிற்கும் மற்றும் பதுளைக்குமாக இந்த விசேட ரயில் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.