அடுத்த வருடமளவில இலங்கையில் பாரிய வௌிநாட்டு முதலீடுகளினூடாக பணப்பெறுமதி அதிகரிப்பதுடன் வேலைவாய்ப்புக்களும் அதிகரிக்கும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்தல் மற்றும் நாட்டில் முதலீடு செய்யப்பட்டிருந்த நிதி வௌிநாடுகளுக்கு அனுப்பப்பட்டமை ஆகிய காரணங்களினால் கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை ரூபாவில் வீழ்ச்சியேற்பட்டது. அடுத்த ஆண்டளவில அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன முதலீட்டாளருடன் இணைந்து செயற்படுவதற்காக பில்லியனுக்கும் அதிகமான நிதியை மூலதனமாக முதலீடு செய்யப்படவுள்ளது. இது தவிர பல வௌிநாட்டு முதலீடுகள் நேரடியாக வழங்கப்படவுள்ளமையினால் மூலதனங்கள் இலங்கைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எண்ணெய் சுத்திகரிப்பு, மின்னுற்பத்தி, கால்நடைதுறை சார் உற்பத்திகள் மற்றும் மீன்பிடித்துறை என்பவற்றில் வௌிநாட்டு முதலீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனூடாக அரசாங்கம் உறுதியளித்தது போன்றே நாட்டில் வேகமான அபிவிருத்தியை மேற்கொண்டு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.