பொது மக்கள் மத்தியில் போஷாக்கை மேம்படுத்துவதில் ஊடகவியலாளரின் பங்களிப்பு என்ற தலைப்பில் ஊடகவியலாளர்களை தௌிவுபடுத்தும் நிகழ்வொன்று நாளை (21) காலி மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது.
காலை 9.00 ஆரம்பமாகவுள்ள இப்பயிற்சி செயலமர்வில் காலி மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இச்செயலமர்வின் பிரதான உரையை கொழும்ப ஶ்ரீபாலி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி டியுடர் வீரசிங்க ஆற்றவுள்ளார்.
பொது மக்கள் மத்தியில் போஷாக்கை மேம்படுத்துவதற்கு சுகாதாரதுறை சாராத துறைகளை சேர்ந்தவர்களின் பங்களிப்பும் அவசியமாகும். அதனால் தேசிய போஷாக்கு செயலக காரியாலயத்தின் பங்களிப்புடன் தேசிய திட்டமாக முன்னெடுக்கப்படும் போஷாக்குக்கான பல்துறை செயற்பாட்டு திட்டத்திற்கமைவாக இச்செயலமர்வு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தினுடாக சரியான போஷாக்கு மற்றும் சுகாதாரம் தொடர்பாக அத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள், சிவில் சமூகம் என்பவற்றை தௌிவுபடுத்தும் திட்டம் ஏற்கனவே நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.