தேசிய நத்தார் விழா கொண்டாட்டம் எதிர்வரும் 22ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆகியோர் தலைமையில் நீர்கொழும்பில் நடைபெறவுள்ளது என சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
கிறிஸ்து பிறப்பினால் மனிதனுக்குள் புத்துயிர் மலர இடமளிப்போம் என்ற தொனிப்பொருளில் இம்முறை தேசிய நத்தார் விழா கொண்டாடப்படுகிறது.
நத்தார் கொண்டாட்டங்களில் சமய நிகழ்வுகளுக்கு இடமளிக்குமாறு வேண்டுகோள் அமைச்சர் விடுத்துள்ளார்.
இதேவேளை, இம்முறை நத்தார் பண்டிகையை முன்னிட்டு இரு முத்திரைகளும் வௌியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.