தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் தேசிய கொள்கை திட்டமிடல் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் 2017 - 2018 ஆண்டுக்கான நான்காவது இளைஞர் பாராளுமன்ற வாக்கெடுப்புக்கள் நேற்று (18) நாடளாவிய ரீதியில் நடைபெற்றது.
மட்டக்களப்பு கல்குடாத் தொகுதியில் 20 பேர் போட்டியிட்ட நிலையில், கரடியனாற்றைச்; சேர்ந்த மனோகரன் சுரேஸ்காந்தன் 3,264 வாக்குகளையும், மட்டக்களப்புத் தொகுதியில் 14 போட்டியிட்ட நிலையில், வவுணதீவு, கொத்தியாபுவைச் சேர்ந்த அருள்நாயகம் தக்ஸிக்கா 1,862 வாக்குகளையும், பட்டிருப்புத் தொகுதியில் 11 பேர் போட்டியிட்ட நிலையில், மகிழுர்முனையைச் சேர்ந்த குணரெட்னம் துசாந்தன் 1,223 வாக்குகளையும் பெற்று வெற்றியீட்டியுள்ளனர் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 3 உறுப்பினர்களை தெரிவு செய்ய 45 வேட்பாளர்கள் போட்டியிட்டதோடு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 15996 இளைஞர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிந்தனர்
மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் ஒருவரை தெரிவு செய்ய 14 வேட்பாளர்கள் போட்டியிட்டதோடு மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 6185 இளைஞர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
LDA_dmu_batti