இவ்வாண்டுக்கான புதிய வாக்காளர் இடாப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16) திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது என்று மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொஹம்மட் தெரிவித்தார்.
புதிய வாக்காளர் இடாப்பில் ஒரு கோடியே 57 இலட்சம் பதிவாகியுள்ளனர் என்று தெரிவித்த மேலதிக தேர்தல் ஆணையாளர், வருடாந்தம் மக்கள் தொகை அதிகரிப்பு 1.5 வீதத்தால் அதிகரித்து வருகிறது என தெரிவித்தார்.
மேலும், கடந்த 2015 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பிற்கமைய ஒரு கோடியே 55 இலட்சத்து 44 ஆயிரத்து 491 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 2017ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலுடன் மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல்களும் நடத்தப்படவுள்ளன. எந்தவொரு தேர்தலை எதிர்கொள்வதற்கும் தேர்தல் ஆணைக்குழு தயார் நிலையில் உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.