விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்கும் உரமானிய நிதி இன்று தொடக்கம் (14) விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வைப்பிலடப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர் விஜித் சந்திர பியதிலக்க தெரிவித்தார்.
அரச ஊழியர்கள் வங்கிகளினூடாக சம்பளத்தை வழங்குவது போல் விவசாயிகளும் தங்களது உர மாணியத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பணத்தை பெற்றுக்கொள்வதில் உள்ள தாமதங்களை இம்முறை குறைக்கும் என்று தாம் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
உர மாணிய நிதியை வைப்பிலிடும் நடவடிக்கை இம்மாதம் 31ஆம் திகதிக்குள் நிறைவடையும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.