அடுத்த வருடம் தொடக்கம் வைக்கோலுக்கு தீவைப்பது முற்றாக தடை செய்யப்பட வேண்டும் என்று அம்பாந்தோட்டை மாவட்டச் செயலாளர் டப்ளியு. எச். கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
அவ்வாறு வைக்கோலுக்கு தீவைப்போர் கைது செய்யப்படுமளவுக்கு சட்டம் கடுமையாக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தீ வைப்பதற்கு பதிலாக வைக்கோலை வயலிலேயே புதைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான முறையான செயன்முறையை கமநலச் சேவை திணைக்களம் மற்றும் கமத்தொழில் திணைக்களமும் இணைந்து செயற்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அம்பாந்தோட்டை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற அரச அதிகாரிகள் மற்றும் கமத்தொழில் அமைப்புக்களுடனான சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்.