ஊவா வெல்லஸ்ஸ புரட்சியாளர்களின் பெயர்கள் தேசத்துரோகிகள் பட்டியலில் இருந்து ஜனாதிபதியின் பணிப்புரையில் கீழ் நீக்கப்பட்டுள்ளது.
198 ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியருக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட 19 இலங்கை வீரர்களின் பெயர்களே இவ்வாறு தேசத்துரோகி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதுடன் சுதந்திர இலங்கைக்கான போராடிய தேசப்பற்றுள்ள வீரர்களாக ஜனாதிபதியினால் உத்தியோகப்பூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான புரட்சியில் தலைமைத்தாங்கிய மொனரவிவல கெப்படிபொல உட்பட அவரது குழுவினரே மேற்படி தேசத்துரோகி பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.