தமிழ் மொழி வரலாற்றுப் பாடத்திட்டத்தில் தமிழர் வரலாறு தொடர்பான மாற்றங்களை கொண்டு வர விசேட குழு அமைக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கல்வியமைச்சின் கேட்போர்கூடத்தில் நேற்றுமுன்தினம் (06) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கல்வியமைச்சினால் வௌியிடப்படும் தமிழ் மொழி மூல வரலாற்று பாட விதானங்களில் தமிழர் தொடர்பான வரலாற்றுகள் முறையாக வழங்கப்படவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார். இது தொடர்பில் ஆராய விசேட குழு நியமிக்கப்படவுள்ளது. அக்குழுவின் பரிந்துரைக்கமைய பாடத் திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.