உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வருடம் ரஷ்யா செல்லவுள்ளார் என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அலெக்சாண்டர் கர்சாவா தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்தில் நேற்று (05) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தூதுவர் இதனை தெரிவித்தார்.
எதிர்வரும் மார்ச் மாதம் 23ம் திகதி இடம்பெறவுள்ள இவ்வுத்தியோகப்பூர்வ விஜயத்தில் ரஷ்ய ஜனாதிபதிக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இந்தியாவின் கோவா நகரில் இடம்பெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த ரஷ்ய ஜனாதிபதி விடுத்த அழைப்பிற்கமைய இவ்விஜயம் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதியின் ரஷ்ய விஜயத்திற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இரு நாடுகளுக்கிடையிலான அரச மட்ட உறவுகளை இவ்விஜயம் மேலும் வலுப்படுத்தும் என்று நம்புகிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.