நாட்டின் நலன் கருதி வெளிநாடுகளில் உள்ள 15 ஆயிரம் மருத்துவர்கள் மற்றும் தாதிமார்கள் திரும்பவேண்டும் என்று ஜனாதிபதி கோரியுள்ளார்.
சுகாதார அமைச்சின் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 40, 50 வருடங்கள் பேசப்பட்ட ஔடத கொள்கையை செயற்படுத்த முடிந்தது. இதன் பலன் கிடைத்து வருகிறது. புகையிலை கம்பனிக்கு வழங்க இருக்கும் தொகை பற்றி வரவு செலுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புகையிலை கம்பனிகளிடம் இருந்து 5 சதம் கூட எடுக்கமாட்டோம். மது, புகை தொடர்பில் கடுமையான முடிவுகளை எடுத்து வரும் நாடாக இலங்கை சர்வதேச மட்டத்தில் கீர்த்தியை பெற்றுள்ளது.
மருத்துவ, தாதிமார் நாட்டை விட்டு சென்று வருகின்றனர். பௌதீக வள முன்னேற்றத்திற்கு ஏற்ப மனித வளத்தை உயர்த்த முடியாது. ஓரிரு வருடத்தில் மருத்துவர்கள், தாதிகளை உருவாக்க முடியாது. இவர்கள் வெளிநாடு செல்லும் ஓய்வுபெறும் தொகையுடன் ஒப்பிடுகையில் பயிற்சி பெறும் வெளியேறும் தாதிமார் தொகையில் சிறு வித்தியாசமே உள்ளன.
உலக அளவில் எமது கல்வி மற்றும் சுகாதாரத்துறை தொடர்பில் நற்பெயர் உள்ளது. நிபுணத்துவ மருத்துவர்கள் தாதிகள் வெளிநாடு செல்வதை நாடு குறித்து கருதி நிறுத்த வேண்டும்.
வெளிநாடுகளில் மருத்துவர்கள் மற்றும் தாதிமார்கள் 15 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்கள் சிறிது நாடு திரும்புமாறு கோருகிறேன்.
மருத்துவர்கள் தாதியர் வெளிநாடு செல்வது குறைந்தால் நாட்டின் சுகாதாரதுறை மேலும் வளர்ச்சி காணும் இலவச சுகாதாரத்தை பாதுகாக்க சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
மக்களின் சுகாதார தரத்திலே நாட்டின் முன்னேற்றமும் வளர்ச்சியும் அடங்குகின்றது. சுகாதார அமைச்சர் ராஜிதவின் தலைமையில் ஆயுர்வேத துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சுகாதாரத்துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கான பலன் கிடைக்க காலம் பிடிக்கிறது. சுகாதார துறை மேம்பாட்டுக்கு சகல மக்களினதும் அர்ப்பணிப்பு தேவை. நோயற்ற வாழ்விற்கு குடும்ப புரிந்துணர்வு பங்களிப்பு அவசியமானது. தேகாரோக்கியமான மக்களை உருவாக்க சகல மட்டத்திலும் அறிவூட்டல்கள் தேவைப்படுகிறது என்று கூறினார்.