நாட்டில் உள்ள நூதனசாலைகளில் வைக்கப்பட்டுள்ள புராதன பொருட்களின் விபரங்களை அலைபேசி மற்றும் டெப் ஊடாக பெற்றுக்கொள்வதற்கான நவீன இலத்திரனியல் வசதிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இ- பாரம்பரியம் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இவ்வசதியினூடாக ஸ்மார் போன், டெப் கணினிக்கு ஏற்றாற் போல் இவ்வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று இலங்கை தகவல் தொழில்நுட்ப மற்றும் தொடர்பான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனூடாக நூதனசாலைகளில் உள்ள பொருட்களை பார்வையிடுவதற்கு முன்னர் தேவையான தகவல்களை அறிந்துகொள்ள முடியும் என்றும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கியலம் ஆகிய மும்மொழிகளிலும் வாசிப்பதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தரம் மிக்க டிஜிட்டல் தொழில்நுட்பம் இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் பாரம்பரியம் தொடர்பில் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் அதிகம் அறிந்துகொள்ள இது ஏதுவாக இருக்கும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.