பல்லின மற்றும் மும்மொழி பாடசாலையொன்றை பொலன்னறுவையில் நிர்மாணிப்பதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்தியா அரசுடன் இணைந்து 1,200 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இப்பாடசாலைக்கான 900 மில்லியன் ரூபாவை இலங்கை அரசும் மிகுதி 300 மில்லியன் ரூபாவை இந்திய அரசும் வழங்கவுள்ளது.
ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் இணைவதற்கு போதிய இடமின்மையால் தரம் 6 தொடக்கம் நிர்மாணிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது
குறித்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்காக கல்வியமைச்சர் முன்வைத்து பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.