நல்லிணக்கம் தொடர்பான தொலைகாட்சி அலைவரிசையொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கருணாரத்ன பரணவிதான நேற்று (01) பாராளுமன்றில் தெரிவித்தார்.
தேசிய கலந்துரையாடல், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
தேசிய ஒருமைப்பாடும் நல்லிணக்க அமைச்சு மற்றும் ஊடகத்துறை அமைச்சு ஆகிய இணைந்து இத்தொலைகாட்சி அலைவரிசையை ஆரம்பிக்கவுள்ளன.
இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த இது தவிர மேலும் பல முயற்சிகளை நாம் மேற்கொண்டுள்ளோம். சமூக வலைத்தளங்களினூடாக இனங்களுக்கிடையே உள்ள ஒற்றுமையை இல்லாதொழிக்கும் வகையிலான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றை தவிர்ப்பதற்கு புதிய சட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.