க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள தேசிய அடையாள அட்டை இதுவரை கிடைக்காத மாணவர்களுக்காக ஆட்பதிவுத் திணைக்களம் எதிர்வரும் சனிக்கிழமை (3) அன்று திறந்திருக்கும்.
அதற்கமைய எதிர்வரும் சனிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரையில் தேவையான மாணவர்கள்
திணைக்களத்திற்கு அவசியமான ஆவணங்களுடன் விஜயம் செய்து தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என்று திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதுவரை தேசிய அடையாள அட்டை கிடைக்காத மாணவர்களுக்காக கடந்த இரு வாரங்களும் சனிக்கிழமை திணைக்களம் சேவையாற்றியருந்த நிலையில் பல மாணவர்கள் திணைக்களத்திற்கு விஜயம் செய்து தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.