அனுமதி பெறாமல் சேவையிலிருந்த விலகிய முப்படையினர் மற்றும் அலுவலக அதிகாரிகள் சட்ட முறைப்படி விலகுவதற்கான பொது மன்னிப்பு காலத்தை வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாளை (01) தொடக்கம் டிசம்பர் 31ஆம்த திகதி வரை இப்பொது மன்னிப்பு காலம் செல்லுபடியாகும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
விடுமுறையின்றி 90 நாட்களுக்கும் அதிகமாக பணிக்கு வராத அனைவரும் விலகியதாகவே கருதப்படுவர். அவ்வாறானவர்கள் குறித்த காலப்பகுதியில் சட்ட முறைப்படி விலகுவதற்கு இப்பொது மன்னிப்புக்காலத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
சட்டமுறைப்படி விலகாமல் பணிக்கு சமூகமளிக்காத படையினர் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை 48,224 என்று செயலாளர் சுட்டிக்காட்டினார்.