தேசிய உணவு பாதுகாப்பு வாரம் இன்று (28) ஆரம்பிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
தேசிய உணவு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இன்று முதல் ஒருவாரகாலத்துக்கு நாடுமுழுவதும் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள் உணவு பாதுகாப்பு தொடர்பான விசேட கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
உணவு பாதுகாப்பு சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முறையின் பிரகாரம் உணவின் தரம் மற்றும் மோசடி தொடர்பாக இந்தவாரம் முழுவதும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அதனடிப்படையில் உணவு வகைகளை தயார் செய்யும் ஹோட்டல்கள் சிற்றுண்டிச்சாலைகள் பேக்கரி மற்றம் தூர பயணம் மேற்கொள்ளும் பஸ் வண்டிகள் நிறுத்தும் பஸ் நிலைய சிற்றுண்டிச்சாலைகள் என்பன இதன்போது சோதனைப்படுத்தப்படவுள்ளன.