கண்டி மாவட்ட விதாதா வள நிலையம் ஏற்பாடு செய்துள்ள வர்த்தக கண்காட்சி மற்றும் விற்பனைச் சந்தை நாளை (26) 9.30 மணிக்கு கண்டி சிட்டி சென்ரரில் ஆரம்பமாகவுள்ளது.
மாலை 7.30 மணிவரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியானது கிராமத்திற்கு தொழில்நுட்பம் என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது.
விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் இராஜாங்க அமைச்சர் லஷ்மன் செனவிரத்ன ஆகியோரின் தலைமையில் இக்கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை ஆரம்பமாகவுள்ளது.