ஐந்து வயதுக்கு குறைந்த யானைக் குட்டிகளை பெரஹரா அல்லது ஏனைய சமய உற்சவங்களுக்கு பயன்படுத்துவதற்கும் 10 வயதுக்கு குறைந்த யானைகளிடம் வேலைவாங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட யானைகளின் பாதுகாப்பை கருத்திற்கு வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அதனை பிரகடனப்படுத்துவதற்கான நிலையான அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.