சுகாதார சேவையாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடமாடும் சேவை எதிர்வரும் 26 ஆம் திகதி கண்டி பொது வைத்தியசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நடமாடும் சேவையானது 6வது தடவையாக நடத்தப்படுகிறது.
அனைத்து வைத்தியசாலைகளின் ஊழியர்களுக்குமான பிரச்சினைகளுக்கு அந்தந்த வைத்தியசாலைகளில் தீர்வுகள் பெற்றுக்கொடுப்பதே இந்நடமாடும் சேவையின் நோக்கமாகும்.
தூர பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளின் ஊழியர்கள் கொழும்புக்கு சென்று அவர்களுடைய தொழில்ரீதியான பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதில் நிலவும் சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த நடமாடும் சேவை நடத்தப்படுகிறது.
இதன் முதற்கட்டம் குருநாகலை பொது வைத்தியசாலையிலும் அடுத்ததாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, நுவரெலியா ஆகிய மாவட்டங்களை கேந்திரமாக கொண்டு நடத்தபட்டமை குறிப்பிடத்தக்கது