வரவு-செலவுத் திட்ட விவாதங்கள் இன்று (22) முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இலங்கை பங்குபற்றும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும். 21, 23 மற்றும் 25ஆம் திகதிகள் தவிர எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி வரை நேரடி ஒளிபரப்பு இடம்பெறும் என சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றம் நேற்று சபாநாயகரின் தலைமையில் கூடியது. தினப் பணிகளை தொடர்ந்து கருத்து வெளியிட்ட போதே சபாநாயகர் இதனை தெரிவித்தார். தற்பொழுது 2 மணி நேரமே நேரடி ஒளிபரப்பு காண்பிக்கப்படுகிறது.
நேரடி ஒளிபரப்பு தொடர்பில் கட்சித் தலைவர் கூட்டத்தில் ஆராய்யப்பட்டது. உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று முதல் டிசம்பர் 10 வரை நேரடி ஒளிபரப்பு காண்பிக்கப்படும்.
காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 வரை ‘ஐ’ அலைவரிசையிலும் பி.ப. ஒரு மணி முதல் 6.30 வரை ரூபவாஹினியிலும் நேரடி ஒளிபரப்பு காண்பிக்கப்படும். எனவே எம்.பி.கள் முன்மாதிரியாக செயற்படுமாறு கோருகிறோம் என்று சபாநாயகர் இதன்போது தெரிவித்தார்.
இங்கு கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேரடி ஒளிபரப்பு வழங்குவது முக்கியமானது அடுத்த வருடமும் நேரடி ஒளிபரப்பு காண்பிக்க எவ்வாறு தேவையான நிதி ஒதுக்குவது என ஆராய வேண்டியுள்ளது என்றார்.