அரச கரும மொழிக் கொள்கை மற்றும் மொழித்திட்டம் தொடர்பாக அரச திணைக்கள அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்ச்சித்திட்டம் நேற்று (21) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கில் பிரதேச செயலகங்கள், மற்றும் மாவட்ட செயலகம், திணைக்களங்களில்அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது, அரசகரும மொழிக் கொள்கையின் முக்கியத்துவம், அரச கரும மொழிக் கொள்கைகள் மீறப்படும் சந்தர்ப்பங்கள், அதற்கான சட்ட ஏற்பாடுகள் என்ன, எதிர்காலத்தில் அரச அலுவலகங்களில் மொழித் திட்டம் ஒன்றைத் தயாரிப்பது எவ்வாறு என்பது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.
இந்த விழிப்புணர்வு வேலைத்திட்டம் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிக் அமைச்சின் அரச கரும மொழிக் கொள்கைளை அமுலாக்கும் திட்டத்திற்கு அமைவாக மேற்கொள்ளப்படுகிறது.
ஆரம்ப நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாவட்ட பொறுப்பதிகாரி ஏ.சி.ஏ.அசீஸ், மாவட்ட தேசிய ஒருமைப்பாட்டு மேம்பாட்டு உதவியாளர் வி.சந்திரகுமார் அகியோரும் கலந்து கொண்டனர்.
LDA_dmu_batti