மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி சந்தனமடு ஆற்றின் இறங்கு துறைக்கான படகுச் சேவையானது நேற்று (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடை மழை காரணமாக சித்தாண்டி சந்தனமடு ஆறு பெருக்கெடுத்ததின் காரணமாக ஈரளக்குளம், வேரம், இலுக்குப்பொத்தாணை, பெரியவட்டவான், பெருமாவெளி போன்ற கிராமங்களுக்கு செல்லும் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களின் நலன்கருதி படகுச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சித்தாண்டி சந்தனமடு பாதையூடாக நாளாந்தம் சுமார் 400க்கு மேற்பட்ட பொதுமக்கள் பிரயாணத்தினை மேற்கொள்வதாக படகுச்சேவையின் உரிமையாளர் எஸ்.வெள்ளையன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதேளை கடந்த 24 மணி நேரத்தில் 32.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் கடந்த 19ம் திகதி 72 மணியத்தியாளத்திற்குள் மழை வீழ்ச்சியின் அளவு 167.6 காணப்பட்டதாகவும் இவை சற்று குறைவடைந்துள்ளதாகவும் மாவட்ட வானிலை அவதான நிலைய கடமைநேர அதிகாரி ஏ.எம்.நியாஸ் தெரிவித்தார்.
LDA_dmu_batti