அரச மற்றும் அரச சார்புத்துறை சேவையில் ஈடுபட்டுள்ளோர் குறித்த தொகைமதிப்பீடு நாளை (17) நாடு முழுவதும் ஆரம்பமாகவுள்ளது.
நான்கு வருடங்களுக்கொருமுறை நடத்தப்படும் இத்தொகை மதிப்பீடானது 11வது முறையாக நடைபெறவுள்ளதாக தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரச மற்றும் அரச சார்புத்துறையில் சேவையில் ஈடுபட்டுள்ளளோரின் பங்களிப்புடன் நாளை முற்பகல் 9.30 தொடக்கம் 11.30 வரையான காலப்பகுதியில இத்தொகை மதிப்பீடு நடத்தப்படவுள்ளது.
அரச மற்றும் அரசசார்புத்துறை சேவையில் ஈடுபட்டுள்ளோர் சம்பந்தமான தொகைமதிப்பின் சகல தகவல்களையும் உள்ளடக்கிய ஆவணங்களை www.statistics.gov.lk என்ற திணைக்கள உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் பார்வையிடலாம்.
தொகை மதிப்பு வினாக்கொத்தை சரியாகப் பூர்த்தி செய்து இத் தொகைமதிப்பினை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு ஒத்துழைக்குமாறு தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம் சகல அரச மற்றும் அரச சார்புத்துறை சேவையில் ஈடுபட்டுள்ளோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.