இந்தோனேஷியாவில் நடைபெறும் 85ஆவது சர்வதேச பொலிஸ் மாநாட்டில் கலந்துகொள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர நேற்று (06) இந்தோனேஷியாவிற்கு பயணமானார்.
இன்று (07) தொடக்கம் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இம்மாநாட்டில் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 190 பொலிஸ் பிரதானிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இவ்விஜயத்தின் போது பொலிஸ் மா அதிபர், அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலின் பொலிஸ் மா அதிபர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் மா அதிபர் நாடு திரும்பும் வரையில் பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சி. டி விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.