ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் போதைவஸ்து பாவனையை தடுக்கும் செயற்திட்டத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் நிறுவன தலைவர்களின் 40 வது மாநாடு நேற்று (24) ஆரம்பமானது.
சட்டம், ஒழங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், இலங்கை போதைவஸ்து பாவனையிலிருந்து முற்றாக விடுபடவில்லையெனவும் 2020 ஆம் ஆண்டில் போதைவஸ்து பாவனையை முற்றாக ஒழிப்பதே அரசாங்கத்தின் இலக்கு என்றும் கூறினார்.
போதைவஸ்துக்கும் குற்றச் செயல்களுக்குமிடையே மிக நெருங்கிய தொடர்பு நிலவுகின்றது. அத்துடன் இது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் துறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதனால் இந்நிலையை மாற்றியமைக்க அனைவரும் ஒன்று சேர்ந்து முயற்சிகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.