மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஜனாதிபதி உத்தியோகப்பூர்வ நடமாடும் சேவை இன்று (17) காலி மாவட்டத்தில் ஆரம்பமானது.
எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்நடமாடும் சேவையானது காலி மாவட்டத்தின் 19 பிரதேச செயலகப்பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.