மாத்தறை மாவட்டத்திலுள்ள குறைந்த வருமானமுடைய 118 குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கு சீமெந்து மூட்டைகள் வழங்கும் நிகழ்வு எதிரவரும் 16ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் மங்கல சமரவீர தலைமையில் நடைபெறவுள்ளது.
குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு வீட்டு நிர்மாணப் பொருட்களை வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள இந்நிகழ்வானது மாத்தறை மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் மாத்தறை மாவட்ட அரசியல்வாதிகள், மாத்தறை பிரதேச செயலாளர் ரஞ்சித் யாப்பா, தேசிய வீடமைப்பு அதிகாரச்சபையின் மாத்தறை மாவட்ட முகாமையாளர் அஜந்த டி சில்வா உட்பட பல அரச அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மாத்தறை மாவட்ட காரியாலயம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.