தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்தில் 938 கிராமங்களைச் சேர்ந்த 3111 பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் சூரியராஜா தெரிவித்துள்ளார்.
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சன்னாசிப்பரந்தன், நெடுங்கேணி தெற்கு, மாமடு, நெடுங்கேணி வடக்கு, ஊஞ்சள் கட்டி, கற்குளம், ஒலுமடு, மருதோடை, நைனாமடு, அனர்ந்த புளியக்குளம் ஆகிய பிரசேதங்களைச் சேர்ந்த 474 குடும்பங்களைச் சேர்ந்த 1369 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் வவுனியா பிரதேச செயலகத்திற்குபட்ட ஓமந்தை, ஆசிக்குளம், பூந்தோட்டம், பறனாட்டாங்கல், சமனங்குளம் ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 464 குடும்பங்களைச் சேர்ந்த 1742 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இம்மக்களுக்கான குடிநீர் வசதிகள் பிரதேச செயலகங்களினூடாக செய்துக்கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.