ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனது இணையளத்தை தமிழ், சிங்கள மொழிகளிலும் ஆரம்பித்துள்ளது.
உள்நாட்டவர்களும் விமான போக்குவரத்து விபரங்கள் உட்பட தேவையான தகவல்களை இலகுவாக பெற்றுக்கொள்ளும் நோக்கில் புதிய சந்தைப்படுத்தல் திட்டத்தினூடாக தேசிய மொழிகளில் இணையதள வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ் ஆரம்பிக்கப்பட்டு 37 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் தேசிய மொழிகளில் தகவல் அறிந்துகொள்வதற்காக இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை சிறப்பான விடயமாக கருதுவதாக சிரேஸ்ட் அதிகாரி கப்டன் சுரேன் ரத்வத்த தெரிவித்துள்ளார்.