இலங்கை - சீனா நாடுகளுக்கிடையில் பாராளுமன்ற உறவை மேம்படுத்தும் நோக்கில் சீன அரசின் விசேட அழைப்பினை ஏற்று பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று (09) மாலை சீனா சென்றுள்ளார்.
இவ்விஜயத்தில் எதிர்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், ஐதேக கட்சியின் பிரதிநிதியாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க, இலங்கை சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்குப் பதிலாக சுசில் பிரேமஜயந்த, ஜே.வி.பி தலைவர் அநுர குமார திஸாநாயக்க, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தவுப் ஹக்கீம், இ.பி.டிபி தலைவர் டக்லஸ் தேவானந்தா ஆகியோரும் சபாநாயகருடன் இணைந்துக்கொண்டுள்ளனர்.
இவ்விஜயத்திற்கான முழுமையான அனுசரனையை சீன அரசு வழங்கியுள்ளது.