தேசிய தொழில் வல்லுநர் பாதுகாப்பு மற்றும் வாரம் இன்று (07) ஆரம்பமாகிறது.
இன்று தொடக்கம் எதிர்வரும் 14ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படவுள்ள தேசிய தொழில் பாதுகாப்பு வாரத்தில் சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகள் மற்றும் விருது வழங்கல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 2ஆம் வாரத்தில் பணிகளில் ஈடுபட்டுள்ள வல்லுநர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் கடந்த 2009 ஆம் ஆண்டு தொடக்கம் தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார வாரத்தை அனுஷ்டிப்பதற்கு அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
தொழில் அமைச்சு மற்றும் தொழில் வல்லுநர் பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைப்பு ஆகியன இணைந்து இவ்வாரத்தை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.