சர்வதேச ஆயுர்வேத கல்வி மற்றும் சந்தை கண்காட்சி எதிர்வரும் 7ஆம் திகதி கண்டி சிட்டி சென்ரரில் காலை 10.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
ஒன்பதாம் திகதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் சர்வதேச ஆயுர்வேத மாநாடுகள், அழகுகலை தொடர்பான விசேட பயிற்சிப்பட்டறைகள், யோகா பயிற்சி செயலமர்வுகள், தேசிய சிகிச்சை முறைகள் போன்ற விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இந்தியா, பாகிஸ்தான், மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து அழைக்கப்பட்ட விசேட விருந்தினர்கள் பலர் வருகைத் தரவுள்ளதுடன் தேசிய சிகிச்சை முறையை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியில் 400 தேசிய வைத்தியர்களும், 120 விசேட வைத்திய நிபுணர்களும் 100 வெளிநாட்டு வைத்தியர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
மத்திய மாகாண சுகாதார, தேசிய மற்றும் நலன்புரி அமைச்சின் வழிகாட்டலில் மத்திய மாகாண ஆயுர்வேத திணைக்களத்தினூடாக இச்சர்வதேச கண்காட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் நிலுகா ஏக்கநாயக்க, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.