மாத்தறை மாவட்டத்தில் கைவிடப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத வயல்களில் என்ன வகையான பயிர்களை பயிரிடலாம் என்று ஆராய்ந்து முன்மொழிவதற்கான குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்று மாவட்ட மேலதிக செயலாளர் பந்துல ரணவீர தெரிவித்தார்.
அண்மையில் மாத்தறை மாவட்டச்செயலகத்தில் நடைபெற்ற விவசாய குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்வயல்களில் கருவா, வாழை போன்ற வருடாந்த பயிர்களின்றி அவ்வயல்களுக்கு பொருத்தமான மரக்கறிவகை, கீரை கை போன்ற வருடாந்த பயிரல்லாதவை முன்மொழியப்பட வேண்டும்.
இக்குழுவில் மாவட்ட விவசாயப்பிரிவு, பிரதி விவசாய பணிப்பாளர் காரியாலயம், கமத்தொழில் சேவை உதவி ஆணையாளர் அலுவலகம், வடிகாலமைப்பு பொறியியல் அலுவலகம் மற்றும் விவசாயம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளடங்கிய வகையில் குழு அமைக்கப்படவேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய மேலதிக செயலாளர் சுட்டிக்காட்டினார்.