வடமாகாணத்தில் அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கான வயதை 35 இலிருந்து 40 ஆக அதிகரிக்க வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அதற்கான வர்த்தமான அறிவித்தல் தற்போது அச்சிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது கல்விச் சேவையில் பணியாற்றும் தொண்டர் சிரியர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஆசிரிகள் , அரை சம்பளம் பெறும் ஆசிரியர்கள் ஆகியோரை மாகாண அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்காக இம்மாற்றம் செய்யப்படவுள்ளது என்று ஆளுநர் தெரிவித்தார்.
இதற்கான அமைச்சரவை பத்திரம் அனுமதிக்காக அமைச்சர் அகில விராஜ் காரியவசமினால் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.